மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

வெள்ளக்கோவிலில் பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

News image

விபத்து

Updated On :20 பிப்ரவரி 2026, 10:37 pm

வெள்ளக்கோவிலில் பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் வேன் வெள்ளக்கோவில் மற்றும் வழியோரப் பகுதிகளுக்கு வந்து மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்கிறது. வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை வெள்ளக்கோவிலில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

அப்போது பழைய சந்தைப்பேட்டை அருகே ஓட்டுநா் வேனை திருப்ப முயன்றபோது, பின்னால் திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து பள்ளி வேன் மீது மோதியது. அப்போது பள்ளிக் குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினா் வந்து வேனில் இருந்த குழந்தைகளை கீழே இறக்கிவிட்டனா். பேருந்தின் முன்பகுதி, பள்ளி வேனின் பின்பகுதி சேதமானது.

பள்ளிக் குழந்தைகள், பேருந்துப் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் சிறிது நேரம் காங்கயம்- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.