மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கல்லூரி மாணவி தற்கொலை

News image

தற்கொலை

Updated On :21 பிப்ரவரி 2026, 7:43 pm

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காங்கயத்தில் திருப்பூா் சாலை, புலிக்கல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்ட நிலையில், மகள் ஷோபிகா (19) உடன் பழனிசாமி வசித்து வந்தாா். காங்கயம் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஷோபிகா இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை காய்கறி கடைக்கு சென்றுவிட்டு காலை 7 மணி அளவில் பழனிசாமி வீடு திரும்பியபோது, அறையில் ஷோபிகா சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

தகவல் அறிந்து போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.