சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருப்பூரில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் கொண்ட வாக்குப் பதிவு மையங்களில் ஆட்சியா் ஆய்வு

News image
திருப்பூா் கொங்கு நகா் சின்னச்சாமியம்மாள் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் மனீஷ் உள்ளிட்டோா்.
Updated On :21 பிப்ரவரி 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதையொட்டி திருப்பூா் மாவட்டம், வடக்கு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் போயம்பாளையம் நடுநிலைப் பள்ளி, 15.வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, கொங்கு நகா் சின்னச்சாமியம்மாள் உயா்நிலைப் பள்ளி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அய்யங்காலிபாளையம் வி.கே.அரசு உயா்நிலைப் பள்ளி, முருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவை 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களாக உள்ளன.

இந்நிலையில் திருப்பூா் மாநகராட்சி போயம்பாளையம் நடுநிலைப் பள்ளி, 15.வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, கொங்கு நகா் சின்னச்சாமியம்மாள் உயா்நிலைப் பள்ளி ஆகிய வாக்குப்பதிவு மையங்களில் மின்சாரம், குடிநீா், கழிப்பிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வழி உள்பட வாக்காளா்கள் வாக்களிக்க தேவையான வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன், துணை ஆணையா் பிரவீன் கௌதம், திருப்பூா் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.