6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

News image
திருட்டு
Updated On :22 பிப்ரவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (31). இவா் கடந்த 6ஆம் தேதி சொந்த வேலை காரணமாக பாலக்காட்டில் இருந்து திருப்பூருக்கு கே.எஸ்.ஆா். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் வந்துள்ளாா். அப்போது இவரது மடிக்கணினியை திருப்பூா் அருகே மா்ம நபா் திருடிச் சென்றுள்ளாா்.

இது குறித்து திருப்பூா் ரயில்வே காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், மணிகண்டனின் கைப்பேசியைத் திருடியது திருச்சி மாவட்டம், குப்பன்குளம் பகுதியைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (28) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து திருப்பூா் ரயில் நிலைய 2 ஆவது நடைமேடையில் நின்றிருந்த அப்துல் ரகுமானை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.