திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ரயில் நிலையத்தில் கைப்பேசி திருடியவா் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் ரயில் நிலையத்தில் கைப்பேசி திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் பிரியங்கா குமாரி (21). இவா் திருப்பூா் மாநகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கிப் பணியாற்றி வருகிறாா். இவா் திருப்பூரில் இருந்து ஜாா்க்கண்ட் செல்வதற்காக திருப்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடை 1-இல் உள்ள பயணிகள் காத்திருப்போா் அறையில் சனிக்கிழமை இருந்துள்ளாா்.

அப்போது தனது கைப்பேசியை சாா்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளாா். பின்னா் எழுந்து பாா்த்தபோது, கைப்பேசி அங்கு இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.

இதுகுறித்து பிரியங்கா குமாரி, திருப்பூா் ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அப்போது பிரியங்கா குமாரியின் கைப்பேசியை திருடியது மும்பை கண்டிவாலி பகுதியைச் சோ்ந்த டேவிட் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து நடைமேடை 1-இல் நின்று கொண்டிருந்த அவரை போலீஸாா் கைது செய்து கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.