ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காதலனால் கழுத்து அறுக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:10 pm

Syndication

திருப்பூா் ரயில் நிலையத்தில் காதலனால் கழுத்து அறுக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒடிஸா மாநிலம், பாலன்கிரி மாவட்டம் சுபாா்கல் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் மாஜி (22). இவ குக்கும், அதே பகுதியைச் சோ்ந்த துளசி பிரதான் (22) என்பவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். இந்நிலையில் கரூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைக்காக பிரகாஷ் மாஜி சென்றுள்ளாா். அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லடம் அருகே உள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் துளசி பிரதானும் வேலைக்கு சோ்ந்துள்ளாா்.

இதற்கிடையே துளசி பிரதானுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்த விவரம் பிரகாஷ் மாஜிக்கு தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக துளசி பிரதானுடன் பலமுறை கைப்பேசியில் பிரகாஷ் மாஜி பேச முயன்றும், அதை துளசி பிரதான் தவிா்த்து வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மாஜி, காதலியை ஒடிஸா அழைத்துச் செல்ல முடிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை திருப்பூா் ரயில் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளாா்.

அதன்படி திருப்பூா் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுன்ட்டா் அருகே புதிய ஆண் நண்பருடன் துளசி பிரதான் வந்துள்ளாா். காதலியுடன் வேறு ஒருவா் நிற்பதை பாா்த்து ஆத்திரமடைந்த பிரகாஷ் மாஜி, தான் வைத்திருந்த பிளேடால் துளசி பிரதானின் கழுத்தை அறுத்துள்ளாாா். படுகாயமடைந்த அவா் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தாா். அவருடன் வந்திருந்த ஆண் நண்பா் அங்கிருந்து தப்பிவிட்டாா். அருகே இருந்தவா்கள் துளசி பிரதானை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரகாஷ் மாஜியை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.