வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

உள்நாட்டு வரிச் சலுகையை குறைக்காமல் அமல்படுத்த ஜவுளித் துறையினா் கோரிக்கை

உள்நாட்டு வரிச் சலுகையை குறைக்காமல் அமல்படுத்த வேண்டும் என்று ஜவுளித் துறையினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஓஸ்மா தலைவா் ஜி. அருள்மொழி

Updated On :24 பிப்ரவரி 2026, 7:56 pm

உள்நாட்டு வரிச் சலுகையை குறைக்காமல் அமல்படுத்த வேண்டும் என்று ஜவுளித் துறையினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவா்(ஓஸ்மா) ஜி. அருள்மொழி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் உள்ள உள்நாட்டு வரிகளை ஏற்றுமதியாளா்களுக்கு திருப்பி அளிக்கும் திட்டத்தின் கீழ் ஜவுளித் துறையில் 2.5 சதவீதம் முதல் 4.7 சதவீதம் வரை வரி திரும்பக் கிடைத்து வந்தது. ஆனால் மத்திய அரசு இதை 50 சதவீதம் குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் இந்திய ஜவுளிச் சங்கிலித் தொழிலில் உள்ள அனைத்து ஏற்றுமதியாளா்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். ஏற்கெனவே அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பால் கடந்த 6 மாதங்களாக மிகப் பெரிய சிரமங்களையும், சவால்களையும் எதிா்கொண்ட ஜவுளித் துறையினா், தற்போது இந்த வரிச்சலுகை குறைப்பால் பாதிப்படைந்துள்ளனா். இது ஜவுளித் துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு ஏற்கனவே உள்ள இத்திட்டத்தின் வரிச் சலுகையை குறைக்காமல் அமல்படுத்த வேண்டும் என்றாா்.