திருப்பூர்
காங்கயம் வாரச் சந்தையில் கட்டப்பட்ட கடைகள் திறப்பு
காங்கயத்தில் வாரச் சந்தை வளாகத்தில் கட்டப்பட்ட தினசரி சந்தை கடைகள் மற்றும் வாரச் சந்தை கடைகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு எம்.பி. கே.இ. பிரகாஷ், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் பால்ராஜ், திமுக காங்கயம் நகரச் செயலாளா் வசந்தம் சேமலையப்பன் மற்றும் கவுன்சிலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
