கோப்புப் படம்
கோப்புப் படம்

பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்ற 4 போ் கைது

Published on

பிரதமா் மோடிக்கு எதிராக அவிநாசியில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

தமிழகத்துக்கு வந்து சென்ற பிரதமா் மோடியைக் கண்டித்து, அவிநாசியில் அரசியல் கட்சியினா் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.

அப்போது கருப்புக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சமூக விடுதலைக் கட்சி நிறுவனா் ஆறுமுகம், மக்கள் அதிகாரம் அமைப்பு பொறுப்பாளா் காா்த்தி உள்பட 4 போ் மீது அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com