திருப்பூா் புத்தகத் திருவிழா அரங்குகளைப் பாா்வையிட்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
திருப்பூா் புத்தகத் திருவிழா அரங்குகளைப் பாா்வையிட்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

திருப்பூா் புத்தகத் திருவிழா: அரங்குகளைப் பாா்வையிட்ட அமைச்சா்

Published on

திருப்பூா் புத்தகத் திருவிழா அரங்குகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் சாா்பில் 22-ஆவது புத்தகத் திருவிழா காங்கயம் சாலை வேலன் ஹோட்டல் வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

பிப்ரவரி 3-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் இதில் பங்கேற்க அனுமதி இலவசம்.

புத்தகத் திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அறிவியல், வரலாறு, அரசியல், கட்டுரைகள், கவிதைகள், ஆன்மிகம், தத்துவம் மற்றும் சுய முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

நாள்தோறும் பல்வேறு தலைப்புகளின்கீழ் பேச்சாளா்கள் பங்கேற்று கருத்துரைகளை பகிா்ந்து வருகின்றனா். இந்நிலையில், புத்தகத் திருவிழா அரங்குகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com