நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

காங்கயம் வட்டத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

News image

காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :29 ஜனவரி 2026, 6:52 pm

காங்கயம் வட்டத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டத்துக்குள்பட்ட காங்கயம், முத்தூா், படியூா், நத்தக்காடையூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 571 மாணவ, மாணவிகளுக்கு ரூ.27.47 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

மேலும், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சாா்பில், காலநிலை மாற்றம் சாா்ந்து இளைய தலைமுறை மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பசுமைப் பள்ளி திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், முத்தூா் பேரூராட்சித் தலைவா் சுந்தராம்பாள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிவக்குமாரி, காங்கயம் நகர திமுக செயலா் வசந்தம் சேமலையப்பன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.