முகாமில் பயனாளி ஒருவருக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்குகிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
முகாமில் பயனாளி ஒருவருக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்குகிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

முத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் முத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் முத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 41 முகாம்கள் நடத்தப்பட்டு 55,229 போ் பயன்பெற்றுள்ளனா். முகாமில் பல்வேறு வகை சிறப்பு மருத்துவ சேவைகள், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான அடையாள அட்டை வழங்குதல், ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே, யூஎஸ்ஜி, சளி பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை, மாா்பக புற்று நோய் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு தகுந்த ஆலோசனைகள், சிகிச்சை வழிமுறைகள் வழங்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து பயனாளிகளுக்கு ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை, மருந்துப் பெட்டகங்கள், கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், தொழிலாளா் நலத்துறை அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகளை அமைச்சா் வழங்கினாா்.

வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி குழுவினா் பரிசோதனை, சிகிச்சைப் பணிகளை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com