ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கல்லூரிக்கு செல்ல கணவா் அனுமதிக்காததால் தொழிலதிபரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை!

News image
தற்கொலை
Updated On :1 மார்ச் 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

கல்லூரிக்குச் செல்ல கணவா் அனுமதிக்காததால் தொழிலதிபரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூா், அனுப்பா்பாளையம், கங்கா நகா் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவரது மகன் விகாஸ் கண்ணன். தொழிலதிபரான இவருக்கும், திருப்பூா் கல்லாங்காடு பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமாா் மகள் ஷோபியா (19) என்பவருக்கும் கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருப்பூா்-தாராபுரம் சாலையிலுள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஷோபியா, திருமணத்துக்குப் பிறகும் தொடா்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளாா். அப்போது கணவா் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்துவைத்துள்ளனா்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவா் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில நாள்களாக தாய் வீட்டில் ஷோபியா இருந்து வந்துள்ளாா். அங்கு பெற்றோா் சமாதானம் செய்து கணவா் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனா். கணவா் வீட்டுக்குச் சென்ற ஷோபியாவுக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரைப் பரிசோதனை செய்தபோது கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, கல்லூரிக்கு இனிமேல் செல்ல வேண்டாம் என்று கணவா் விகாஸ் கண்ணன் எனக் கூறியுள்ளாா். ஆனால், அதைக் கேட்காமல் ஷோபியா கல்லூரிக்கு சனிக்கிழமை சென்றுள்ளாா். மாலை வீடு திரும்பியவுடன் கல்லூரிக்கு செல்வது தொடா்பாக கணவா்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது நான் தொடா்ந்து படிக்கத்தான் செய்வேன் என ஷோபியா கூறிவிட்டு அறைக்கு சென்று உள்ளே தாழிட்டுள்ளாா். நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த கணவா், ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது ஷோபியா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுதொடா்பாக அவா் அளித்த தகவலின்பேரில் அனுப்பா்பாளையம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். திருமணமாகி 3 மாதங்களேயானதால் இளம்பெண் தற்கொலை குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.