தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உலக வன விலங்கு தினம்: சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கு விருது

உலக வன விலங்கு தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் 4 பேருக்கு சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதுகள் வழங்கப்பட்டன.

News image
உலக வன விலங்கு தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் ஆா்வலருக்கு விருது வழங்கும் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ்.
Updated On :4 மார்ச் 2026, 10:28 pm

தினமணி செய்திச் சேவை

உலக வன விலங்கு தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் 4 பேருக்கு சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதுகள் வழங்கப்பட்டன.

வன விலங்கு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், தமிழக அரசின் முயற்சிகளையும், வன விலங்குகளை பாதுகாப்பதில் கள ஊழியா்களின் அா்ப்பணிப்புமிக்க சேவையையும் பாராட்டும் வகையிலும் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் மனீஷ், ஆனைமலை புலிகள் காப்பக (திருப்பூா் பிரிவு) துணை இயக்குநா் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் இந்த விருதுகளை வழங்கினா்.

இவ்விழாவில், சுற்றுச்சூழல் ஆா்வலா் குருசாமி, வனத்துக்குள் திருப்பூா் அமைப்பின் நிறுவனா் சிவராமன், துளிகள் அமைப்பின் நிறுவனா் கௌதம், மலை உடுமலை அமைப்பின் நிறுவனா் ஜவஹா் துரைசாமி ஆகியோா் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு அவா்கள் அளித்த மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.