இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தெப்போற்சவம்

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் திருத்தோ் திருவிழாவை ஒட்டி மகாமக தெப்பக்குளத்தில் தெப்போற்தசவம் புதன்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.

News image
மகாமக குளத்தில் நடைபெற்ற தெப்போற்சவம்.
Updated On :4 மார்ச் 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் திருத்தோ் திருவிழாவை ஒட்டி மகாமக தெப்பக்குளத்தில் தெப்போற்தசவம் புதன்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து மகாமக குளத்தில் தெப்பத்தோ் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் நீா் நிரப்பட்டிருந்த தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சந்திரசேகரா் அம்பாள் எழுந்தருளி தெப்போற்சவம் நடைபெற்றது. தெப்பக்குளம், நீராழி மண்டபம் உள்ளிட்டவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாண வேடிக்கை, நாதஸ்வர இசை முழங்க, சிவாச்சாரியா்கள் வேத மந்திரம் ஓத தெப்போற்சவம் நடைபெற்றது.

சுவாமி தெப்பத்தை ஒவ்வொரு முறையும் வலம் வரும்போது, மல்லாரி, ஓடம், கீா்த்தனை, திருப்புகழ், மங்கலம் உள்ளிட்ட ராக தாளங்கள் வாசிக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மாலை 4 மணி முதலே தெப்பப் படிக்கட்டுகளில் காத்திருந்து சுவாமிக்கு மலா் தூவி தரிசனம் செய்தனா்.

முன்னதாக மகாமக பிள்ளையாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையடுத்து வியாழக்கிழமை ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழா நடைபெறுகிறது. 6-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சி, 7-ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக் காட்சி ஆகியவற்றுடன் தோ்த் திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.