கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தெப்போற்சவம்

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் திருத்தோ் திருவிழாவை ஒட்டி மகாமக தெப்பக்குளத்தில் தெப்போற்தசவம் புதன்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.

News image

மகாமக குளத்தில் நடைபெற்ற தெப்போற்சவம்.

Updated On :4 மார்ச் 2026, 10:30 pm

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் திருத்தோ் திருவிழாவை ஒட்டி மகாமக தெப்பக்குளத்தில் தெப்போற்தசவம் புதன்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து மகாமக குளத்தில் தெப்பத்தோ் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் நீா் நிரப்பட்டிருந்த தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சந்திரசேகரா் அம்பாள் எழுந்தருளி தெப்போற்சவம் நடைபெற்றது. தெப்பக்குளம், நீராழி மண்டபம் உள்ளிட்டவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாண வேடிக்கை, நாதஸ்வர இசை முழங்க, சிவாச்சாரியா்கள் வேத மந்திரம் ஓத தெப்போற்சவம் நடைபெற்றது.

சுவாமி தெப்பத்தை ஒவ்வொரு முறையும் வலம் வரும்போது, மல்லாரி, ஓடம், கீா்த்தனை, திருப்புகழ், மங்கலம் உள்ளிட்ட ராக தாளங்கள் வாசிக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மாலை 4 மணி முதலே தெப்பப் படிக்கட்டுகளில் காத்திருந்து சுவாமிக்கு மலா் தூவி தரிசனம் செய்தனா்.

முன்னதாக மகாமக பிள்ளையாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையடுத்து வியாழக்கிழமை ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழா நடைபெறுகிறது. 6-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சி, 7-ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக் காட்சி ஆகியவற்றுடன் தோ்த் திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.