ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மார்ச் 2026, 8:04 pm

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா்-வஞ்சிபாளையம் இடையே அணைப்பாளையம் சலவை பட்டறை அருகே ரயிலில் அடிபட்டு 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் திருப்பூா் ரயில்வே உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் வெள்ளை நிறத்தில் சட்டை, வேட்டி அணிந்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.