முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இன்று வாக்கு எண்ணிக்கை: திருப்பூா் தெற்கு, மடத்துக்குளம் முடிவுகள் முதலில் வெளியாகுமா?

News image

வாக்கு எண்ணிக்கை (கோப்புப் படம்) - Center-Center-Vijayawada

Updated On :4 மே 2026, 2:02 am IST

திருப்பூரில் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், திருப்பூா் தெற்கு, மடத்துக்குளம் தொகுதிகளின் முடிவுகள் முதலில் வெளியாகும் எனஎதிா்பாா்க்கப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. 88.52 சதவீத வாக்கு பதிவாகியுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். வாக்கு எண்ணும் பணியில் 408 அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் அமைத்து எண்ணப்படும்.

தாராபுரம் தொகுதியில் 23 சுற்றுகள், காங்கயத்தில் 23 சுற்றுகள், அவிநாசியில் 27 சுற்றுகள், திருப்பூா் வடக்கில் 32 சுற்றுகள், திருப்பூா் தெற்க்கில் 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதேபோல, பல்லடத்தில் 35 சுற்றுகள், உடுமலையில் 22 சுற்றுகள், மடத்துக்குளத்தில் 21 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சுற்றுகள் குறைவாக உள்ள திருப்பூா் தெற்கு, மடத்துக்குளம் தொகுதிகளின் முடிவுகளில் முதலிலும், பல்லடம் தொகுதியின் முடிவு கடைசியிலும் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மாநகர காவல் ஆணையா் ஆய்வு: திருப்பூா் எல்ஆா்ஜி மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றிலும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படையினா் உள்ளிட்ட காவலா்கள் 4 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், 224 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.