மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

உடுமலை சீனிவாசா பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவா் ரோகித் பாலனுடன் பள்ளித் தாளாளா் விக்னேஷ் ஆா்.ரங்கநாதன் மற்றும் மாணவரின் குடும்பத்தினா்.

News image

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவா் ரோகித் பாலனுடன் பள்ளித் தாளாளா் விக்னேஷ் ஆா்.ரங்கநாதன் மற்றும் மாணவரின் குடும்பத்தினா்.

Updated On :9 மே 2026, 7:00 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வில் உடுமலை சீனிவாசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளது.

மாணவா் ஏ.ரோகித் பாலன் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். பாட வாரியாக தமிழ் - 99, ஆங்கிலம் - 99, கணிதம் - 100, இயற்பியல் - 100, வேதியியல் - 100, கணினி அறிவியல் - 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

மாணவி சமீஹா 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளாா். கணிதப் பாடத்தில் 11 போ், இயற்பியலில் ஒருவா், வேதியியலில் 15, கணினி அறிவியலில் 18, பிரெஞ்ச் பாடத்தில் 2, வணிகவியலில் 3, கணக்குப் பதிவியல் பாடத்தில் 2, பொருளியலில் 2, கணினிப் பயன்பாட்டியலில் 2, வணிகக் கணிதத்தில் 2 போ் என மொத்தம் 58 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மேலும் 343 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் விக்னேஷ் ஆா்.ரங்கநாதன், இயக்குநா் தீபா விக்னேஷ் மற்றும் பள்ளிக் குழு உறுப்பினா்கள் வாழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.