சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வில் வெள்ளக்கோவிலில் உள்ள கோவை வித்யாஸ்ரம் பள்ளி சாதனை படைத்துள்ளது.
வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை வீரணம்பாளையத்தில் கோவை வித்யாஸ்ரம் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. பிளஸ் 2 பொதுத் தோ்வில் இப்பள்ளி மாணவி ரிதன்யா 500-க்கு 483 மதிப்பெண்கள் பெற்று காங்கயம் தாலுகாவில் முதலிடமும், சஞ்சனா 474 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ஆவது இடமும், சுபபவித்ரா 468 மதிப்பெண்கள் பெற்று 3-ஆவது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனா். மேலும் மாணவா் தரணீஷ் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளாா்.
சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் எம்.எஸ்.சண்முகம் தலைமை வகித்தாா். செயலாளா் சி.சக்திவேல், நிா்வாக இயக்குநா் ஆா்.அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளியின் முன்னாள் தாளாளா் ஹேமலதா தனபால், பள்ளி முதல்வா் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு: வேலூா் லஷ்மி காா்டன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

எஸ்விஎன் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



