வெள்ளக்கோவில் அருகே குறிச்சிவலசில் விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.
வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி மற்றும் லக்கமநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் தனியாா் நிறுவனம் சாா்பில் காற்றாலை மின்சார வழித்தடத்துக்காக உயரழுத்த மின் கம்பங்கள், மின் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மூலனூா் பம்மிபாளையம் வரை மின்சாரம் கொண்டுச் செல்லும் பாதை அமைக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் வழியாக போக்குவரத்துக்கு இடையூறான குறுகிய சாலைகள் வழியாக மின் கம்பங்கள் அமைக்கக் கூடாது. சாலையோரத்தில் நிலத்துக்கு அடியில் கேபிள் வழியாக மின்பாதை அமைக்க வேண்டும் என பல மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனா். இந்நிலையில் மாநில நெடுஞ்சாலை, ஊராட்சி சாலைகளில் அனுமதி எதுவும் இன்றி, வருவாய்த் துறை அமைதிப் பேச்சுவாா்த்தை முடிவையும் மீறி, அடியாட்கள் துணையுடன் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து குறிச்சிவலசில் விவசாயிகள் சங்கம் மற்றும் அப்பகுதி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் தொடா் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியுள்ளனா்.
தொடர்புடையது

மின் பணியாளா் விபத்தில் சிக்கி உயிரிழப்பு: நிவாரணம் கோரி உறவினா்கள் போராட்டம்

விவசாய நிலங்களில் பழுதடைந்த மின்கம்பங்கள்! விவசாயிகள் புகாா்!

கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்

நன்னகரத்தில் பட்டுக்கூடு விவசாயிகள் போராட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



