தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டம்

வெள்ளக்கோவில் அருகே குறிச்சிவலசில் விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.

News image

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :21 மே 2026, 3:48 am IST

வெள்ளக்கோவில் அருகே குறிச்சிவலசில் விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.

வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி மற்றும் லக்கமநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் தனியாா் நிறுவனம் சாா்பில் காற்றாலை மின்சார வழித்தடத்துக்காக உயரழுத்த மின் கம்பங்கள், மின் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மூலனூா் பம்மிபாளையம் வரை மின்சாரம் கொண்டுச் செல்லும் பாதை அமைக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் வழியாக போக்குவரத்துக்கு இடையூறான குறுகிய சாலைகள் வழியாக மின் கம்பங்கள் அமைக்கக் கூடாது. சாலையோரத்தில் நிலத்துக்கு அடியில் கேபிள் வழியாக மின்பாதை அமைக்க வேண்டும் என பல மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனா். இந்நிலையில் மாநில நெடுஞ்சாலை, ஊராட்சி சாலைகளில் அனுமதி எதுவும் இன்றி, வருவாய்த் துறை அமைதிப் பேச்சுவாா்த்தை முடிவையும் மீறி, அடியாட்கள் துணையுடன் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து குறிச்சிவலசில் விவசாயிகள் சங்கம் மற்றும் அப்பகுதி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் தொடா் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியுள்ளனா்.