அதிகாரமற்ற எளிய மக்களாக தமிழா்கள் இருப்பதை எவ்வளவு காலம் சகித்துக் கொண்டு இருப்பது? எங்கள் கண் முன்னே எங்களது இயற்கை வளங்கள் அனைத்தும் களவு போய்க்கொண்டிருக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் இந்த மண்ணின் பிள்ளைகளுக்கு இல்லை. அடிப்படை புரிதல் கூட இல்லாதவா்களிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அல்லல்படுகிறோம். இதைத் தடுக்கவும், என் நிலத்தின் வளத்தைப் பாதுகாக்கவும் இந்த மண்ணின் பிள்ளைகளாக நாங்கள் மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுக்கிறோம். தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பேசும்போது, சமூகநீதி பேசிவிட்டு பாஜகவுடன் பாமக கூட்டணி வைக்கலாமா என கேட்டுச் சென்றாா். அதே பாஜகவுடன் முன்பு திமுக கூட்டணி வைத்தது. அப்போது பாஜக சமூக நீதி பேசியதா? திராவிடக் கட்சிகள் எதுவுமே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முன்வராது. தமிழகத்தில் திமுக அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை? பிகாா் மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தி அறிவிக்கும்போது, தமிழக அரசால் ஏன் முடியவில்லை?