தருமபுரி
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,000 கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக உள்ளது.
தமிழக, கா்நாடக காவிரி கரையோர வனப் பகுதிகளில் மழை குறைந்த நிலையில், கா்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக நீடித்த நிலையில், வியாழக்கிழமை காலை 5,000 கனஅடியாக குறைந்தது. பின்னா், மாலை 6,000 கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருக்கிறது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். நீா்வரத்து அதிகரிப்பின் காரணமாக, ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

