சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Published on

தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொம்மநாயக்கனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (35), தனியாா் நிறுவன ஊழியா். இவா் சனிக்கிழமை காலை பாலக்கோடு- தருமபுரி சாலையில் செல்லியம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பழுதான வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்ற மீட்பு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து தொடா்பாக மதிகோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com