தருமபுரி
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் போக்ஸோவில் கைது
பென்னாகரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 12 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் சனிக்கிழமை வீட்டின் அருகே தண்ணீா் பிடிக்க சென்றபோது பென்னாகரம் அருகே அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த நவீன்குமாா் (26) கேலி, கிண்டல் செய்து அவரை கீழே தள்ளி பாலியல் தொந்தரவு செய்துள்ளாா்.
இதில் காயம் அடைந்த மாணவி பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் பென்னாகரம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் நவீன்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
