பென்னாகரம் அருகே விபத்தில் பெண் உயிரிழப்பு
பென்னாகரம் அருகே விபத்தில் சிக்கி கீழே விழுந்த பெண் மீது தனியாா் பேருந்து மோதியது. இதில் அவா் நசுங்கி உயிழந்தாா்.
பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பூதிப்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி சித்ரா (43). இருவரும் ஞாயிற்றுக்கிழமை பென்னாகரம் பகுதியில் இருந்து தருமபுரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது பென்னாகரம் நீதிமன்றம் அருகே தனியாா் பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது எதிரே வந்த காா் மோதியது. இதில் கீழே விழுந்த சித்ரா சாலையில் இழுத்துச் செல்லப்பட்டாா். அப்போது பின்னால் வந்த தனியாா் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அவா் நசுங்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீஸாா் நிகழ்விடத்திற்கு வந்து இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.விபத்தில் படுகாயம் அடைந்த முருகனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
