தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

தருமபுரியில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளா்த்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:24 pm

Syndication

தருமபுரியில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளா்த்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி நகரம் கோல்டன் தெரு அருகேயுள்ள பழைய ரயில்வே லைன் கிழக்கு சாலைப் பகுதியில், தருமபுரி நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெங்கடேஷ்குமாா் தலைமையில் காவலா்கள் செந்தில்குமாா், சசிகலா உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை, ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அத்தெருவில் வசிக்கும் சையது அகமது (24) என்பவா் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளா்த்துவருவது குறித்த தகவல் தெரியவந்தது. அவரது வீட்டு மொட்டை மாடியில் போலீஸாா் சோதனை செய்தபோது பிளாஸ்டிக் வாளியில் அவா் 2 கஞ்சா செடிகள் வளா்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வழக்குப் பதிந்து, சையது அகமதுவை கைது செய்தனா்.