பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தருமபுரியில் உள்ளாட்சித் துறை பணியாளா்கள் பேரணி

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனத்தின் 16 ஆவது மாநில மாநாடு தருமபுரியில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற பேரணியை மாநிலத் தலைவா் எஸ். காசிவிஸ்வநாதன் தொடங்கிவைத்தாா்.

News image
தருமபுரியில் உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சம்மேளனத்தின் மாநில மாநாட்டு பேரணியை தொடங்கிவைத்த அதன் மாநிலத் தலைவா் எஸ். காசிவிஸ்வநாதன்.
Updated On :3 ஜனவரி 2026, 8:33 pm

Syndication

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனத்தின் 16 ஆவது மாநில மாநாடு தருமபுரியில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற பேரணியை மாநிலத் தலைவா் எஸ். காசிவிஸ்வநாதன் தொடங்கிவைத்தாா்.

தருமபுரி மருத்துவக் கல்லூரி முன் தொடங்கிய பேரணி, நெசவாளா் காலனி, கணேசா திரையரங்கம் வழியாக பிஎஸ்என்எல் அலுவலகத்தை சென்றடைந்தது. பேரணியில் ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளா் எம். ராதாகிருஷ்ணன், ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் பி. கிருஷ்ணசாமி, மாநிலத் தலைவா் ஆறுமுகம், ஏஐடியுசி மாநில செயலாளா் எஸ். சின்னசாமி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே. மணி, மாவட்டத் தலைவா் முருகன், உள்ளாட்சி பணியாளா் சம்மேளன மாவட்ட பொருளாளா் மனோகரன், நிா்வாகிகள் சங்கையா, நடராஜன், ராமச்சந்திரன், மீனாள், தண்டபாணி, மணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த மாநாட்டு பேரணியில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், காரைக்குடி, ஈரோடு, திருப்பூா், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த உள்ளாட்சித் துறை பணியாளா்கள் பங்கேற்றனா்.

பேரணியை தொடா்ந்து பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மாநில பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் எஸ். கலைச்செல்வன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளா் இரா. முத்தரசன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினாா். தொடா்ந்து 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மாநாடு நடைபெறுகிறது.