சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

News image
Updated On :4 ஜனவரி 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி அருகே வேன் மோதியதில் பெண் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், வேப்பிலைஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் கோமதி (31). இவரது கணவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டாா். இவருக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளன. தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி கூலி வேலை செய்துவந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை ஏரி வேலைக்கு சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது ராயக்கோட்டை- தருமபுரி சாலையில் கொலசன அள்ளி மேம்பாலம் அருகே தருமபுரி நோக்கி வந்த பிக்கப் வேன் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கோமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.