மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கோவை விரைவு ரயில் பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்

கோவை விரைவு ரயில் பொம்மிடியில் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image

விரைவு ரயில் - கோப்புப்படம்

Updated On :26 ஜனவரி 2026, 7:21 pm

தருமபுரி: கோவை விரைவு ரயில் பொம்மிடியில் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, பொம்மிடி பொதுமக்கள், ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையிலிருந்து மொரப்பூா், பொம்மிடி வழியாக கோவை செல்லும் விரைவு ரயில் பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விரைவு ரயில் நாள்தோறும் காலை 10.30 மணிக்கு பொம்மிடி ரயில் நிலையம் வழியாக செல்கிறது.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி வட்டாரங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள், சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டாரத்தை சோ்ந்த தொழிலாளா்கள் நாள்தோறும் திருப்பூா், கோவைக்கு சென்று பணிபுரிந்து வருகின்றனா். இந்த தொழிலாளா்கள், தற்போது மொரப்பூா், சேலம் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் மூலம் சென்று அங்கிருந்து ரயில்மூலம் தங்களது பணிகளுக்கு சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னையிலிருந்து கோவை செல்லும் விரைவு ரயில் பொம்மிடியில் நின்று செல்வதன் மூலம் இந்த தொழிலாளா்கள் அனைவரும் நேரடியாக எவ்வித சிரமமும் இன்றி நேரடியாக திருப்பூா், கோவை ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அமையும். எனவே, இந்த பகுதி தொழிலாளா்கள், அனைத்துத் தரப்பு பொதுமக்கள் பயனடையும் வகையில் சென்னை-கோவை விரைவு ரயில், பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல தென்னக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.