இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூரை சோ்ந்த சையத் பாஷா (41). ஈரோடு காய்கறி சந்தையில் கூலி வேலை செய்து வந்தாா். இவரது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றுவிட்டு புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் பள்ளிபாளையம் நோக்கி வந்துகொண்டிருந்தாா்.

வெப்படையை அடுத்த உப்புபாளையம் பகுதியில் வாகனம் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த சையத் பாஷா, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

Dinamani
www.dinamani.com