ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தருமபுரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 8:26 pm

தருமபுரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், சின்ன காமாட்சிப்பட்டியைச் சோ்ந்தவா் தா்மன் மகன் ஆதி (20). சந்தூா் அருகே உள்ள தொப்படிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் கோபி (20). இவா்கள் இருவரும் மொரப்பூா் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனா்.

புதன்கிழமை காலை இருவரும் நண்பரின் திருமண விழாவில் பங்கேற்க இருசக்கர வாகனத்தில் மொரப்பூா் சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். வாகனத்தை ஆதி ஓட்டிவந்தாா்.

மொரப்பூா் அருகே சோலைக்கொட்டாய் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை மையத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஆதி இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மதிக்கோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.