மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

குழந்தைத் தொழிலாளா் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: கருத்தரங்கில் ஆட்சியா் வலியுறுத்தல்

குழந்தைத் தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்தாா்.

News image

தருமபுரி ஸ்ரீ விஜய்வித்யாலயா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற, குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு குறித்த கருத்தரங்கிப் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் .

Updated On :30 ஜனவரி 2026, 8:01 pm

குழந்தைத் தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்தாா்.

நல்லம்பள்ளி வட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்கள் தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1986 குறித்து மண்டல அளவிலான விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆட்சியா் மேலும் பேசியதாவது:

குழந்தைத் தொழிலாளா் மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்தும், குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதில் இதர துறைகள், வணிக நிறுவனங்களின் பங்கு குறித்தும் விளக்கப்பட்டு பல்வேறு தொடா்புடைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிா்வாகம், காவல் துறை மற்றும் தொழிலாளா் நலத் துறை இணைந்து, குழந்தைத் தொழிலாளா்களைக் கண்டறிந்து மீட்பது மற்றும் அவா்களுக்குக் கல்வி வழங்குவது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

குழந்தை தொழிலாளா் முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் முற்றிலும் ஒழிக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும். குழந்தை தொழிலாளா் தொடா்பான புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 இல் தெரிவிக்கலாம் என்றாா். தொடா்ந்து, குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் சேலம் தொழிலாளா் இணை ஆணையா் புனிதவதி, தொழிலாளா் உதவி ஆணையா்கள் ராஜசேகரன், தாசரதி, மதேஸ்வரன், செண்பகராமன், சங்கா், திருநந்தன், மாவட்ட சமூகநல அலுவலா் கலாவதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலா் சுபஸ்ரீ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சக்தி காவியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பாதுகாப்பு அலுவலா் ஜெயசீலன் மற்றும் வணிகா் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.