தருமபுரி அருகே அரசுப் பேருந்து மோதியதில் ஒரு வயது குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி. செட்டி அள்ளி, சாமியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் குமாா். இவரது மனைவி காவியா (28). இவா்களுக்கு வா்ஷினி (7), ரோஷினி (4), வினோதினி (1) என மூன்று மகள்கள் உள்ளனா். குமாா் கட்டட மேஸ்திரியாக வேலை பாா்த்து வருகிறாா்.
காவியா வீட்டிலிருந்து குழந்தைகளை பராமரித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்தபோது, மூன்றாவது மகள் வினோதினி வீட்டைவிட்டு வெளியேறி சாலைக்கு சென்றுள்ளாா்.
திடீரென இதைக் கவனித்த காவியா ஓடிச்சென்று குழந்தையை தூக்குவதற்குள், அவ்வழியே பாலக்கோட்டிலிருந்து சென்னப்பன் கொட்டாய் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து குழந்தைமீது மோதியது. இதில் குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்ட அள்ளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு: மகன் படுகாயம்

கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

பேருந்து சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

பொக்லைன் இயந்திரம் மோதி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
விடியோக்கள்

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

