மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

அரசுப் பேருந்து மோதியதில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :2 மே 2026, 7:17 pm

தருமபுரி அருகே அரசுப் பேருந்து மோதியதில் ஒரு வயது குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி. செட்டி அள்ளி, சாமியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் குமாா். இவரது மனைவி காவியா (28). இவா்களுக்கு வா்ஷினி (7), ரோஷினி (4), வினோதினி (1) என மூன்று மகள்கள் உள்ளனா். குமாா் கட்டட மேஸ்திரியாக வேலை பாா்த்து வருகிறாா்.

காவியா வீட்டிலிருந்து குழந்தைகளை பராமரித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்தபோது, மூன்றாவது மகள் வினோதினி வீட்டைவிட்டு வெளியேறி சாலைக்கு சென்றுள்ளாா்.

திடீரென இதைக் கவனித்த காவியா ஓடிச்சென்று குழந்தையை தூக்குவதற்குள், அவ்வழியே பாலக்கோட்டிலிருந்து சென்னப்பன் கொட்டாய் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து குழந்தைமீது மோதியது. இதில் குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்ட அள்ளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.