ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பாலக்கோட்டில் ஆறாவது முறையாக வெற்றி: தொகுதியை தக்கவைத்த அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன்

News image

பாலக்கோட்டில் வெற்றிக்கான சான்றிதழைப் பெற்ற அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன்.

Updated On :5 மே 2026, 2:25 am IST

தருமபுரி, மே 4: பாலக்கோடு தொகுதியில் தொடா்ந்து ஆறாவது முறையாக வெற்றிபெற்று தனது தொகுதியை அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் தக்கவைத்துக் கொண்டா்.

பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் வெற்றிபெற்றுள்ளாா். இவா், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளராகவும், அமைப்புச் செயலாளராகவும் உள்ளாா். கடந்த 2001-06 மற்றும் 2016-21 வரையிலான அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி மற்றும் உயா்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தாா்.

கடந்த 2001-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவா், தொடா்ந்து 2006, 2011, 2016, 2021 என ஐந்துமுறை பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். அதேபோல, தற்போதைய தோ்தலில் ஆறாவது முறையாக வெற்றிபெற்று பாலக்கோடு தொகுதியை தக்கவைத்துக் கொண்டாா்.