எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்  தீக்குளிக்க முயற்சி

சொத்துத் தகராறில் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர்

Updated On :25 டிசம்பர் 2018, 8:37 am IST

சொத்துத் தகராறில் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது. 
தருமபுரி மாவட்டம்,  பென்னாகரம் வட்டம், வட்டுவனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கலா (58). இவரது கணவர் மட்டி(எ) இருளப்பன். இவர்களுக்கு சொந்தமான இடம் குறித்து உறவினர்களுக்கு இடையே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில், கலாவுக்கு சொந்தமான கிணறு, மின் மோட்டாரை அவரது உறவினர்கள் சேதப்படுத்தி கொலை செய்ய முயன்றனராம். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கலா, இருளப்பன், மகன் ராஜரத்தினம் (45), மருமகள் மாயா(42),  பேத்தி, பேரன் உள்ளிட்ட 6 பேர் தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.