சொத்துத் தகராறில் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வட்டுவனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கலா (58). இவரது கணவர் மட்டி(எ) இருளப்பன். இவர்களுக்கு சொந்தமான இடம் குறித்து உறவினர்களுக்கு இடையே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில், கலாவுக்கு சொந்தமான கிணறு, மின் மோட்டாரை அவரது உறவினர்கள் சேதப்படுத்தி கொலை செய்ய முயன்றனராம். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கலா, இருளப்பன், மகன் ராஜரத்தினம் (45), மருமகள் மாயா(42), பேத்தி, பேரன் உள்ளிட்ட 6 பேர் தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளி அருகே போதைப் பொருள் விற்பனை: உத்தரவை நிறைவேற்றாதது ஏன்?

கேரளத்தில் வேகமாகப் பரவும் ஷிகெல்லா தொற்று: வயநாட்டில் மேலும் 7 சிறாா்கள் பாதிப்பு

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பு மனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் வழக்கு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்





