தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

கிராம சபைக் கூட்டத்தை முறையாக நடத்தக் கோரி மனு

கிராம சபைக் கூட்டத்தை சட்டத்துக்கு உள்பட்டு முறையாக நடத்தக் கோரி,  மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் தன்னார்வலர்கள் மனு அளித்தனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:37 am IST

கிராம சபைக் கூட்டத்தை சட்டத்துக்கு உள்பட்டு முறையாக நடத்தக் கோரி,  மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் தன்னார்வலர்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் அளித்த மனுவின் விவரம்: கிராம சபை என்பது  மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பின் அடிநாதம் போன்றது. கிராமத்தின் பலம் வாய்ந்த அமைப்பாகும். எனவே, மாவட்ட நிர்வாகமும்,  தமிழக அரசும் ஆண்டுக்கு நான்குமுறை கட்டாயம் கிராம சபைக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்துகின்றன. ஆனால், கிராம சபைக் கூட்டம் குறித்து உள்ளாட்சி அமைப்புகளால் முறையாக விளம்பர அறிவிப்புகள் செய்யப்படுவது இல்லை. இந்தக் கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் சேருவதில்லை. இதனால், கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் பங்கேற்கின்றனர். சமூகத் தணிக்கையின் போது, பொதுமக்கள் கோரும் கோரிக்கைகள் மறுக்கப்படுகின்றன. எனவே, கிராம சபைக் கூட்டத்தை சட்டப்படி முறையாக நடத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.