உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம் கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தருமபுரி, கிருஷ்ணகிரியில் திறனறித் தேர்வு

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 11 இடங்களில் நடத்தப்பட்ட திறனறித் தேர்வில் 3216 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர்.

Updated On :5 நவம்பர் 2018, 7:38 am IST

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 11 இடங்களில் நடத்தப்பட்ட திறனறித் தேர்வில் 3216 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்காக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தலா ரூ. 1250 வழங்கும் பொருட்டு, எஸ்எஸ்எல்சி படிக்கும்போதே திறனறித் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வுகள் 11 இடங்களில் நடத்தப்பட்டன. மொத்தம் 3216 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் மு. பொன்முடி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கிருஷ்ணகிரியில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனறித் தேர்வை 3,834 மாணவ, மாணவிகள் எழுதினர்.
மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி - 2, ஒசூர் -4, காவேரிப்பட்டணம் -2, சூளகிரி, வேப்பனஅள்ளி, தேன்கனிக்கோட்டை, பர்கூர், மத்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் தலா ஒரு மையம் என மொத்தம் 15 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.