தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 11 இடங்களில் நடத்தப்பட்ட திறனறித் தேர்வில் 3216 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்காக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தலா ரூ. 1250 வழங்கும் பொருட்டு, எஸ்எஸ்எல்சி படிக்கும்போதே திறனறித் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வுகள் 11 இடங்களில் நடத்தப்பட்டன. மொத்தம் 3216 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் மு. பொன்முடி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கிருஷ்ணகிரியில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனறித் தேர்வை 3,834 மாணவ, மாணவிகள் எழுதினர்.
மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி - 2, ஒசூர் -4, காவேரிப்பட்டணம் -2, சூளகிரி, வேப்பனஅள்ளி, தேன்கனிக்கோட்டை, பர்கூர், மத்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் தலா ஒரு மையம் என மொத்தம் 15 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








