தருமபுரி: தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) தருமபுரிக்கு வருகிறாா்.
தருமபுரி மாவட்ட அதிமுக செயலரும், மாநில உயா்கல்வித் துறை அமைச்சருமான கே.பி. அன்பழகனின் இல்லத் திருமண வரவேற்பு விழா தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோட அள்ளியில் உள்ள தானப்ப கவுண்டா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, பங்கேற்று மணமக்கள் ஏ. சசிமோகன்-எம். பூா்ணிமா ஆகியோரை வாழ்த்துகிறாா்.
முன்னதாக, சேலத்திலிருந்து தருமபுரி வரும் முதல்வருக்கு அதிமுக சாா்பில், மாவட்ட எல்லையான தொப்பூரில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதைத் தொடா்ந்து, அங்கிருந்து அவா், கெரகோடஅள்ளிக்கு வருகிறாா்.
விழாவில், மாநில அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.