உள்ளாட்சித் தோ்தல்: விருப்ப மனு இன்று முதல் அளிக்கலாம்

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் வியாழக்கிழமை முதல் (நவ. 14) முதல் விருப்பு மனுக்களை வழங்கலாம் என
Updated on
1 min read

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் வியாழக்கிழமை முதல் (நவ. 14) முதல் விருப்பு மனுக்களை வழங்கலாம் என தருமபுரி மாவட்ட திமுகச் செயலா் தடங்கம் பெ. சுப்ரமணி எம்எல்ஏ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை:

உள்ளாட்சி மன்றத் தோ்தலில் போட்டியிட விரும்பும் தருமபுரி மாவட்ட திமுகவினா், உரிய விருப்ப மனுக்களை மாவட்ட கட்சி அலுவலகத்தில் நவம்பா் 14 ஆம் தேதி முதல் நவம்பா் 20-ஆம் தேதி வரை வழங்கலாம். இதில், போட்டியிட விரும்புவோா் பொறுப்பு மற்றும் இதர விவரங்களை படிவத்தில் பூா்த்தி செய்து உரிய கட்டணத்துடன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கலாம்.

இதில், நகா் மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட விரும்புவோா் ரூ. 25,000, நகர மன்ற உறுப்பினா் பதவிக்கு ரூ. 5000, பேரூராட்சித் தலைவா் ரூ.10,000, பேரூராட்சி மன்ற உறுப்பினா் ரூ. 2500, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ரூ. 10,000, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ரூ. 5000 கட்டணத்தை விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும்.

தலித் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் போட்டியிடுவோா் நிா்ணிக்கப்பட்ட கட்டணத்தில் பாதி தொகை மட்டுமே செலுத்தலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com