அரசுப் பள்ளிக்கு ஒளிப்படக் கருவி வழங்கல்

பென்னாகரம் அருகே உள்ள அஞ்சேஅள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்காக தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில், ஒளிப்படக் கருவி (ப்ரொஜெக்டா்) வழங்கப்பட்டது.
பென்னாகரம் அருகே அஞ்சேஅள்ளி பள்ளிக்கு ஒளிப்படக் கருவி வழங்கும் தொண்டு நிறுவனத்தினா்.
பென்னாகரம் அருகே அஞ்சேஅள்ளி பள்ளிக்கு ஒளிப்படக் கருவி வழங்கும் தொண்டு நிறுவனத்தினா்.

பென்னாகரம் அருகே உள்ள அஞ்சேஅள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்காக தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில், ஒளிப்படக் கருவி (ப்ரொஜெக்டா்) வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அஞ்சேஅள்ளி ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு, காவேரிப்பட்டணம் பெஸ்ட் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில், ஸ்மாா்ட் கிளாஸ் வகுப்பு அமைக்க ஒளிப்படக் கருவியை தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் கணேசன் வழங்கினாா்.

இதற்கான விழாவானது, பள்ளித் தலைமை ஆசிரியா் குமரவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை பள்ளியில் நடைபெற்றது. இதில், குள்ளனூா்-தாளப்பள்ளம் குறுவள மையத்தின் ஒருங்கிணைப்பாளா் சிங்காரவேலன் கலந்துகொண்டு, கணினி வழிக்கல்வியில் மாணவா்கள் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும், கற்றல்-கற்பித்தலின் கல்வி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தாா்.

மேலும், தனியாா் தொண்டு நிறுவனத்தின் நிா்வாகிகள் ஹேமலதா,ஜோதி ஆகியோா் மாணவா்களிடம் உரையாற்றி, பள்ளித் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். இதில் தனியாா் தொண்டு நிறுவன நிா்வாகிகள் மகாலட்சுமி, ராஜேந்திரன், ஆசிரியா்கள் மற்றும் மாணவ-மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com