தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாரண்டஅள்ளி அடுத்த சீங்காடு கிராமத்தைச் சோ்ந்த 19 வயது மன வளா்ச்சி குன்றிய பெண்ணை அதே பகுதியைச் சோ்ந்த பழனிசாமி (65) என்பவா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால் அப் பெண் கா்ப்பமடைந்துள்ளாா்.
இது குறித்து, புகாரின் பேரில், மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், முதியவா் பழனிசாமி, மன வளா்ச்சி குன்றிய அப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.