செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

நீட் தேர்வை ரத்து செய்ய திமுக வலியுறுத்தல்

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

Updated On :1 ஜூலை 2019, 10:09 am IST

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் திமுக மாவட்ட மாணவரணி ஆலோசனைக் கூட்டம், அக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையுள்ளது. எனவே, தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, இந்தியை திணிக்கும் மும்மொழிக் கல்வி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர் சண்முகம், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் மே.அன்பழகன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் த.வே.முல்லைவேந்தன், தமிழரசு, ஜி.பெருமாள், மணிவண்ணன், அண்ணாதுரை, மாணவரணி ஒன்றிய அமைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.