ஊத்தங்கரையில்சர்வதேச தீயணைப்புப் படையினர் தின விழா
By DIN | Published On : 05th May 2019 05:22 AM | Last Updated : 05th May 2019 05:22 AM | அ+அ அ- |

சர்வதேச தீயணைப்புப் படையினர் தின விழா ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) க.செந்தில்குமார் தலைமை வகித்தார். ஊத்தங்கரை அரசு ஆண்கள் பள்ளி உதவி தலைமையாசிரியர் கு.கணேசன் முன்னிலை வகித்தார். ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய பணியாளர்கள் மு.கிருஷ்ணமூர்த்தி, க.அன்பு, மா.ராமமூர்த்தி, ப.மணிகண்டன், மு.பிரகாசம், பூ.சிதம்பரம், த.இராமு, வெ.வினோத்குமார் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.