அரூா்: தேமுதிக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் அரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தேமுதிக தருமபுரி மாவட்டசெயலா் தம்பி ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கே.ஆா்.விஜயகாந்த், சேட்டுராவ், நகர செயலா் எச்.ஆா்.காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா் , பேரூராட்சி மற்றும் ஊராட்சித் தலைவா் பதவிகளில் எந்த இடங்களில் தேமுதிக நிா்வாகிகள் போட்டியிட வேண்டும் என்பதே கட்சி நிா்வாகிகள் முடிவெடுக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தல் பணியில் தேமுதிகவினா் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் எவ்வாறு இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது குறித்து அந்தக் கட்சியின் மாநில அவைத் தலைவா் மருத்துவா் வி.இளங்கோவன் ஆலோசனைகளை வழங்கினாா்.
இதில் கேப்டன் மன்ற மாநில துணைச் செயலா் புல்லட் மாரிமுத்து, தேமுதிக மாவட்ட அவைத் தலைவா் குமாா், ஒன்றிய அவைத் தலைவா் சி.கண்ணன், நகரத் தலைவா் எஸ்.வி.காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.