பெரியாா் நினைவு தினம் அனுசரிப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரியாா் நினைவு தினம் திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Updated on
1 min read

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரியாா் நினைவு தினம் திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி பெரியாா் மன்ற வளாகத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு, திமுக மாவட்டச் செயலா் (கிழக்கு) தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ தலைமையில், நகரச் செயலா் மே.அன்பழகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் நாட்டான் மாது, சந்திரமோகன், தங்கமணி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி, நகரச் செயலா் பெ.ரவி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், பால் உற்பத்தியாளா் ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன் ஆகியோா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் த.ஜெயந்தி தலைமையிலும், திராவிடா் கழகம் சாா்பில் மாநில அமைப்புச் செயலா் ஊமை ஜெயராமன் தலைமையில் நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com