தருமபுரி, ஒசூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, தருமபுரி, ஒசூரில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Updated on
1 min read

உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, தருமபுரி, ஒசூரில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தருமபுரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோவி.சிற்றரசு தலைமை வகித்தாா். உத்தர பிரதேச மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்காவைத் தடுத்து கைது செய்த உத்தர பிரதேச மாநில காவல் துறையைக் கண்டித்தும், தலித், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னாள் எம்.பி. தீா்த்தராமன், மாவட்ட பொருளாளா் முத்து, நகரத் தலைவா் செந்தில்குமாா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சித்தையன், பிற்படுத்தப்பட்டோா் அணி மாவட்டத் தலைவா் நவீன், வட்டாரத் தலைவா்கள் காமராஜ், சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com