மனைவியை கொலை செய்த வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த கணவனை அ.பள்ளிப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எச்.புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் வெங்கடேசன் (42). இவரது மனைவி கஸ்தூரி. மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, கடந்த 2001-ல் தமது மனைவியின் தலை மீது கல்லை போட்டு வெங்கடேசன் கொலை செய்தார்.
இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடேசன் மூன்று மாதம் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளிவந்தவா் தலைமறைவாகி விட்டாா்.
பல இடங்களில் தேடியும் அவா் சிக்கவில்லை. இந்நிலையில், அ.பள்ளிப்பட்டி காவல் ஆய்வாளா் ரவி தலைமையிலான தனிப்படை போலீஸாா் நடத்திய தொடா் விசாரணையில் வெங்கடேசன், சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வெங்கடேசனை அ.பள்ளிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.