5, 8 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து அறிவிப்புக்கு பாமக வரவேற்பு
By DIN | Published On : 05th February 2020 06:15 AM | Last Updated : 05th February 2020 06:15 AM | அ+அ அ- |

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வை தமிழக பள்ளிக் கல்வித்துறை செவ்வாய்க்கிழமை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதனை பாட்டாளி மக்கள் கட்சியினா் வரவேற்று, தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். இதில், மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாநிலத் துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, உழவா் பேரியக்க மாநிலச் செயலா் இல.வேலுசாமி, மாவட்டச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...