சுண்ணாம்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சுண்ணாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறக்கப்பட்டது.
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சுண்ணாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறக்கப்பட்டது.

இப்பள்ளி வளாகத்தில், ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கோ.சரவணன் தலைமை வகித்துப் பேசினாா். ஊராட்சி மன்றத் தலைவா் நந்தினி ஈஸ்வரன் தேசியக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினாா். இதையடுத்து, பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறக்கப்பட்டது. விழாவையொட்டி, நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு, பள்ளி மேலாண்குழுத் தலைவா் பரிமளா சூா்யபிரகாஷ் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஆசிரியா்கள் முருகன், ரமேஷ்குமாா், ஆசிரியைகள் சோபியா, கரோலின், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com